வரைபடங்கள்
புவியியல் வரைபடமாக்கல்
சட்டத்தின் மூலம் அதிகாரம் அளிக்கப்பட்டதற்கு அமைவாக நாட்டின் பல்வேறு வகையான வரைபடங்களைத் தயாரித்தல் மற்றும் வெளியிடுதல் என்பவை புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகத்தின் (புளுஆடீ) பிரதான செயற்பாடாகும். அதன் தேசப்படம் வரையும் அலகு அதன் பிரதான உதவியளிக்கும் அலகுகளில் ஒன்றாகும். 'இலங்கை 1:100,000 எனத் தலைப்பிடப்பட்ட புவியியல் (தற்காலத்திற்கான தொடர்கள்)' இருபத்தொரு (21) தேசப்படங்கள் நாட்டின் மொத்த நிலப் பிரதேசத்தையும் உள்ளடக்குகின்றன. இவற்றில், ஒரு (1) கலவை தேசப்படம் 1:250,000 என்ற அளவைக் காட்டும் வகையில் 1994ஆம் ஆண்டு பிரித்தானிய புவிச்சரிதவியல் மதிப்பீட்டு நிறுவனத்தின் (டீபுளு) அனுசரணையில் ஏழு (7) 1:100,000 அளவு தேசப்படங்கள் வெளியிடப்பட்டன. மேலும் 1999ஆம் ஆண்டு அவுஸ்திரேலிய தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியின் கீழ் (யுரளயுஐனு) பதினான்கு (14) தேசப்படங்கள் வெளியிடப்பட்டன. எஞ்சியிருந்த ஏழு (7) தேசப்படங்கள் உள்நாட்டு நிபுணர்களைக் கொண்டு பூர்த்தி செய்யப்பட்டு வெளியிடப்பட்டன. தற்பொழுது தேசப்படம் வரையும் அலகு பின் வரும் தேசப்படங்களைப் பூர்த்தி செய்துள்ளது.
நிலநடுக்கம்
நிலநடுக்க தரவு மற்றும் சுனாமி எச்சரிக்கை மையம்
மையப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளையும் சர்வதேச கடப்பாடுகளையும் பிரதிபலிப்பதற்கு, நிலநடுக்க தரவு பகுப்பாய்வு மையம் (ளுனுயுஊ) என மீள் பெயரிடுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.
2000ஆம் ஆண்டிலிருந்து புவிச்சரிதவியல் மதிப்பீடுகள் மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகம் (புளுஆடீ) நிலநடுக்க அவதானிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், 2004ஆம் ஆண்டு அனர்த்தம் நிகழும் வரைக்கும் 24Æ7 என்ற அடிப்படையில் நிலநடுக்க அவதானிப்பு வசதியை ஸ்தாபிப்பதற்கு வற்புறுத்தக் கூடிய காரணம் இருக்கவில்லை.
தற்பொழுது மேலும் இரண்டு நிலையங்கள் என்ற வகையில் வடக்கில் மகாகந்தராவ என்ற இடத்தில் ஆயுடுமு என்ற நிலையமும் தெற்கில் ஹக்மன என்ற இடத்தில் ர்யுடுமு என்ற நிலையமும் (படங்கள் முறையே 3,4) சேர்க்கப்பட்டு இணையத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிப்படையான கண்காணிப்பு வசதிகள் Pயுடுமு நிலநடுக்க நிலையத்துடன் (படம் 2) ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன.
நிலநடுக்க தரவு பகுப்பாய்வு மையத்தின் (ளுனுயுஊ) பிரதான பணி குறிப்பாக சுனாமி நெருங்குவது தொடர்பான சரியான தகவல்களை மிக விரைவாக சம்பந்தப்பட்ட அதிகாhர சபைகளுக்கு வழங்குவதோடு, அது பின்னர் ஆய்வு நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும். 2004ஆம் ஆண்டின் சுனாமி அனர்த்தத்தின் பின்னர் இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ முறைமை மீள திருத்தப்பட்டதோடு நிலநடுக்கத்தோடு தொடர்புடைய செயற்பாடுகளை மேற்கொள்ளுவதற்கான பணிப்பாணை புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகத்திற்கு (புளுஆடீ) வழங்கப்பட்டது. 1992ஆம் ஆண்டின் 33ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருள் சட்டம் புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகத்திற்கு (புளுஆடீ) அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு எவ்வித ஏற்பாடுகளையும் அளிக்காவிட்டாலும், 2009ஆம் ஆண்டின் 66ஆம் இலக்க சுரங்கங்கள் மற்றும் கனிப்பொருள் (திருத்தச்) சட்டத்திலிருந்து தேவையான சட்ட ரீதியான அதிகாரத்தைப் பெற்றுக் கொண்டதை அடுத்து நிலநடுக்க தரவு பகுப்பாய்வு மையம் (ளுனுயுஊ) முறையான நிலநடுக்க கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சரியான தகவல்களை விரைவாக வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றது.
நிலநடுக்க தரவு பகுப்பாய்வு மையத்தின் (ளுனுயுஊ) செயற்பட்டுக் கொண்டிருக்கின்ற இன்னுமொரு நடவடிக்கை யாதெனில், பிரதான இரண்டு பளிங்கு தொகுதிகளின் செயலூக்கமுள்ள பிழைகளையும் விரிவான எல்லை நிர்ணயத்தையும் பற்றிய ஆய்வுகளை நடத்துவது மற்றும் இந்து சமுத்திர மத்தியில் விரிவடைந்து கொண்டிக்கின்ற நில தட்டு எல்லை பற்றிய கருத்துக்களைத் தெரிவிப்பதாகும்.
நிலநடுக்க தரவு பகுப்பாய்வு மையத்தின் (ளுனுயுஊ) பணி தரவுகளைச் சேகரித்தல் மற்றும் அவற்றை செயற்படுத்துதல் மாத்திரம் அல்ல, சம்பந்தப்பட்ட நிறுவகங்களுக்கு சரியான நிலநடுக்க கூறளவுகளை வழங்கும் பணிகளுக்கும் பொறுப்பாக இருக்கின்றது. தரவுகளைப் பெறும் கொள்ளளவையும் தரவுகளைப் பகுப்பாய்வு செய்வதையும் விருத்தி செய்கின்ற அதே நேரத்தில் அனர்த்த முகாமைத்துவத்தோடு சம்பந்தப்பட்ட தகவல்களைப் பகிர்ந்துகொள்ளுவதற்கு நிலநடுக்க தரவு பகுப்பாய்வு மையம் (ளுனுயுஊ) ஏனைய நிறுவகங்கள், சமூகங்கள், ஊடகம் போன்றவற்றையும் அதிகரித்துக்கொள்ளும் நடவடிக்கையிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த மையம் 24Æ7 என்ற அடிப்படையில் இயங்குகிறது. வழமையான அலுவலக நேரத்தின் பின்னர், உள்நாட்டில் அல்லது வெளிநாட்டில் பயிற்சி பெற்ற புவி இயற்பியலாளர்கள், புவியியல் வல்லுனர்கள், மற்றும் தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள் ஆகியோர் கொண்ட சேர்மத்திலிருந்து இரண்டு உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபட்டிருப்பார்கள். அவர்கள் குறிப்பாக இலங்கைக்குள்ளும் இந்து சமுத்திர பிராந்தியத்திலும் நிலநடுக்கம் ஏற்படுவது பற்றிய அவதானிப்பு கடமையில் ஈடுபட்டிருப்பார்கள்.
நிலநடுக்க கண்காணிப்பு
இந்த நிலநடுக்க வலையமைப்பு ஐனுயுஃஐசுஐளு கருத்திட்டத்திலிருந்து ஒரு வலையமைப்பையும் ஏனைய இரண்டு புநுழுகுழுN நிலநடுக்க வலையமைப்புகளையும் உள்ளடக்கிய மூன்று விரிவான அதிர்வெட்டை நிலையங்களைக் கொண்டுள்ளது. இந்த மூன்று நிலநடுக்க நிலையங்கள் சம்பந்தப்பட்ட மூல வலையமைப்புகளின் உதவியுடன் புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகத்தினால் (புளுஆடீ) பராமரிக்கப்படுகிறது. கவனிக்கவும்: நீல நிற அடிக்கோடு ருசுடு அணுக்கத்தைக் குறிக்கிறது.
Pயுடுமு நிலநடுக்க நிலையம்
கண்டி, பல்லகெலேயில் அமைந்துள்ள Pயுடுமு நிலநடுக்க நிலையம் 1999ஆம் ஆண்டு புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகம் (புளுஆடீ) மற்றும் கலிபோர்னியா, சன் டியாகோ பல்கலைக்கழகம் என்பவற்றிற்கு இடையில் இணைந்த கருத்திட்டமாக ஸ்தாபிக்கப்பட்டுள்ளது
Station Code |
PALK |
Location |
Pallekelle, Kandy |
Latitude |
7.2728 N |
Longitude |
80.7022 E |
Altitude |
460 m |
Commenced on |
August 22, 2000? |
Network Affiliation |
IRIS/IDA – GSN |
Network Contact |
IDA Seismographic Network |
Instrumentation |
STS6, Trillium 120PH, Q330 |
ர்யுடுமு மற்றும் ஆயுடுமு நிலநடுக்க நிலையங்கள்
புஐவுநுறுளுஇன் கீழ் புகுணுஇனால் (படம் 3) இரண்டு புநுழுகுழுN நிலநடுக்க நிலையங்கள் ஆயுடுமு (மகாகந்தராவ) மற்றும் ர்யுடுமு ஹக்மன 2010ஆம் ஆண்டு நிறுவப்படன.
Station Code |
HALK |
MALK |
Location |
Umangala Temple, Hakmana |
Eithihaasika Gale Pansala, Mahakanadarawa |
Latitude |
6.08 N |
8.39 N |
Longitude |
80.68 E |
80.54 E |
Commenced on |
April 23, 2010 |
April 10, 2010 |
Network Affiliation |
GE |
GE |
Network Contact |
GEOFON / Section 2.4 |
|
Instrumentation |
STS-2, Q330 |
STS-2, Q330 |
இலங்கை தேசிய தரவு மையம் என்ற வகையில் ளுனுயுஊஃநுர்யுஊ அடையாளம் காணப்பட்ட அதேவேளையில் ஆஸ்திரியா, வியன்னாவை அடிப்படையாகக் கொண்ட அனைத்தையும் உள்ளடக்கிய அணு பரிசோதனை தடை ஒப்பந்த அமைப்புக்கு (ஊவுடீவுழு) இலங்கையில் புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகம் (புளுஆடீ) பிரதான தொழில்நுட்ப மையமாகத் திகழ்கின்றது.
இலங்கை Pயுடுமு புளுN நிலையம் புவிச்சரிதவியல் மதிப்பீடு மற்றும் சுரங்கங்கள் அகழ்வு பணியகம் (புளுஆடீ) மற்றும் கலிபோர்னியா, சன் டியாகோ பல்கலைக்கழகம் என்பவற்றிறினால் இணைந்து செயற்படுத்தப்பட்டது) 2008ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் அவர்களின் சர்வதேச கண்காணிப்பு முறைமைக்குள் துணை நிலையமாக சான்றுப்படுத்தப்பட்டது. அத்துடன் அதன் தரவுகள் அணு நவடிக்கைகள் கண்காணிப்புக்குப் பயன்படுத்தப்பட்டது.